சென்னை - திருப்பதி ரயில்கள் பகுதியளவு ரத்து!

சென்னை - திருப்பதி இடையே இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

திருப்பதி யார்டில் நடைபெறும் பராமரிப்புப் பணியின் காரணமாக திருப்பதி செல்லும் சில ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.

சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் விரைவு ரயில்கள் ரேணிகுண்டாவுடன் நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பராமரிப்புப் பணிகள் காரணமாக மே 15 முதல் 31 வரை ரேணிகுண்டா மற்றும் திருப்பதி இடையே இயக்கப்படும் ரயில்கள் இருவழித்தடங்களிலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
3 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை: ஆட்சியர்களுக்கு உத்தரவு!

சென்னை சென்ட்ரலிருந்து காலை 6.25 மணிக்கு திருப்பதி செல்லும் சப்தகிரி விரைவு ரயில் ரேணிகுண்டா மற்றும் திருப்பதி இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது. அதேபோல், திருப்பதியில் இருந்து மாலை 6.05 மணிக்கு சென்னை சென்ட்ரல் செல்லும் சப்தகிரி விரைவு ரயில் திருப்பதி மற்றும் ரேணிகுண்டா இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.

சென்னை சென்ட்ரலிருந்து பிற்பகல் 4.25 மணிக்கு திருப்பதி செல்லும் விரைவு ரயில் ரேணிகுண்டா மற்றும் திருப்பதி இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல், திருப்பதியில் இருந்து காலை 10.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் செல்லும் விரைவு ரயில் திருப்பதி மற்றும் ரேணிகுண்டா இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com