எலி பேஸ்ட் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

பற்பசை என்று நினைத்து எலி பேஸ்ட் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள்.
Published on
Updated on
1 min read

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே பி. கொட்டாரகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்( 33). அவருக்கு அனுஷ்கா (3), பாலமித்திரன் (2), ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் அந்த கிராமத்தில் நடைபெறும் கோயில் திருவிழாவிற்கு அவரது தங்கையான அறிவழகி குடும்பத்தினருடன் வந்துள்ளார்.

அறிவழகியின் மகள்கள் லாவண்யா (5), ராஷ்மிதா (2), அனுஷ்கா (3) மற்றும் பாலமித்திரன் (2), ஆகிய 4 குழந்தைகளும் வீட்டில் இருந்த எலி பேஸ்ட் மருந்தை, பல் துலக்கும் பேஸ்ட் என நினைத்து வாயில் வைத்து விளையாடி கொண்டிருந்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள்.
வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு எச்சரிக்கை!

அதனைப் பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து அருகிலுள்ள விருதாச்சலம் அரச மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூர் மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிதம்பரம் போலீஸார் மற்றும் ஆலடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் வீட்டிலிருந்த எலி பேஸ்ட் மருந்து என தெரியாமல் சாப்பிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com