தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சென்னை நகரில் 319 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம்

சென்னையில் தற்போது வரை 319.26 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

News image

பட்டாசுக் கழிவுகள்

Updated On :2 நவம்பர் 2024, 4:04 pm

DIN

சென்னையில் தற்போது வரை 319.26 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

சென்னையில் தீபாவளி பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடிய நிலையில், மாநகராட்சிப் பகுதிகளில் பட்டாசுக் கழிவுகளை அகற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் சென்னை மாநகராட்சிப்பகுதிகளில் அக்.31ஆம் தேதி மதியம் முதல் இன்று காலை 11 மணி வரை 319.26 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இந்த பட்டாசுக் கழிவுகள் தனியாக சேகரிக்கப்பட்டு கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்சாலை வளாகத்தில் அமைந்துள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய கழிவுகள் சேகரிப்பு மற்றும் அகற்றும் தமிழ்நாடு வேஸ்ட் மேனேஜ்மென்ட் லிமிடெட் நிலையத்துக்கு தனி வாகனங்கள் மூலம் பாதுகாப்பாக கொண்டு செல்லப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.