தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

முகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் அடுத்த 2 நாள்களுக்கு கூடுதல் டோக்கன்கள்!

சார்பதிவாளர் அலுவலகங்களில் நாளை, நாளை மறுநாள் கூடுதல் டோக்கன்கள் வழங்கல்

News image
Updated On :6 நவம்பர் 2024, 8:54 pm IST

ஐப்பசி மாத முகூர்த்த நாள்களில் சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன.

சார்பதிவாளர் அலுவலகங்களில் வழக்கமாக சுபமுகூர்த்த நாள்களில் அதிக எண்ணிக்கையில் பத்திரப்பதிவு நடைபெறும். இதன் காரணமாக மேற்கண்ட நாள்களில் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு அதிகமானோர் வருகை தருவதால், அந்த நாள்களில் பத்திரப்பதிவு முன்பதிவு வில்லைகள் கூடுதலாக ஒதுக்கீடு செய்ய மக்கள் தரப்பிலிருந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மக்களின் கோரிக்கையை ஏற்று ஐப்பசி மாத முகூர்த்த நாள்களில் வழக்கமாக வழங்கப்படும் முன்பதிவு வில்லைகளை விட கூடுதலாக 50 வில்லைகள் வழங்கப்பட உள்ளதாக பதிவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நவ.7, 8 ஆகிய இரு நாள்கள், ஒரேயொரு சார்பதிவாளருடன் செயல்படும் அலுவலகங்களில் 100 டோக்கன்களுக்கு பதிலாக மொத்தம் 150 டோக்கன்கள் வழங்கப்படும். 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களில் 200 டோக்கன்களுக்கு பதிலாக மொத்தம் 300 டோக்கன்கள் வழங்கப்படும். தட்கல் முறையிலான முன்பதிவு டோக்கன்களும் கூடுதலாக வழங்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.