நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் உள்பட 10 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே மோதல் நிகழ்ந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன் மற்றும் 10க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
கடந்த 2017ஆம் ஆண்டு முதல் கட்சியுடன் பயணித்ததாகவும் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடுவதாக தொடர்ந்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செயல்பட்டு வருவதால் அதிலிருந்து விலகுவதாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்ட செயலாளர் ஆக பயணித்ததாக தெரிவித்துள்ளார்.
கட்சியிலிருந்து விலகுவதாக நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் தேவேந்திரன், செய்தியாளர் சந்திப்பில் அறிவித்துப் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென உள்ளே நுழைந்த நாம் தமிழர் கட்சியின் மற்ற நிர்வாகிகள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோதலாக மாறியதால் அங்கே பதற்றம் ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வலைதளங்களில் வைரலாகும் நாதக வேட்பாளரின் கையொப்பமிட்ட பத்திரம்: அதில் அப்படி என்ன இருக்கிறது?

நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு எதிரான மனு தள்ளுபடி!

கவுண்டம்பாளையம் தொகுதியில் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்!

விஜய்க்கு இன்று நடப்பது எனக்கு 15 ஆண்டுகளாக நடந்து வருகிறது: சீமான் விமர்சனம்
வீடியோக்கள்

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை


.jpg?w=1200&q=65&auto=format%2Ccompress&fit=max)