சென்னையில் நாளை கனமழை பெய்யும்! வெதர்மேன் அப்டேட்

சென்னையில் இன்றிரவு முதல் கனமழை பெய்ய வாய்ப்பு...
சென்னையில் நாளை கனமழை பெய்யும்! வெதர்மேன் அப்டேட்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தின் வட மாவட்டங்களில் நாளை(நவ. 12) கனமழை பெய்யும் என்று எச்சரித்துள்ளார் வானிலை ஆராய்ச்சியாளர் பிரதீப் ஜாண்.

சற்று முன் அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை(நவ. 12) முதல் நவ. 17-ஆம் தேதி வரை மழை பெய்யுமெனவும், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுவதால், வடகிழக்குப் பருவமழைப்பொழிவு இன்றிரவு அல்லது நாளை காலை ஆரம்பமாகும்.

வட மாவட்டங்களான விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், சேலம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருச்சி, பெரம்பலூர், கடலூர், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, டெல்டா பகுதிகள் மற்றும் பெங்களூரிலும் கனமழை பெய்யும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com