சென்னை எழும்பூரிலிருந்து திருநெல்வேலி செல்லும் ‘வந்தே பாரத்’ ரயிலை 16 பெட்டிகளைக் கொண்டு இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
நாடு முழுவதும் முக்கிய நகரங்களுக்கிடையே ஒரே நாளில் சென்று திரும்பும் வகையில் ‘வந்தே பாரத்’ ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆரம்பத்தில், இந்த ரயில்கள் 16 பெட்டிகளைக் கொண்டு இயக்கப்பட்டன. பல வழித்தடங்களில் பயணிகள் குறைவான அளவில் பயணம் மேற்கொண்டதால் அனைத்து ‘வந்தே பாரத்’ ரயில்களும் 8 பெட்டிகளைக் கொண்டு இயக்கப்பட்டன. பயணிகளின் வரவேற்பைப் பொருத்து 16 பெட்டிகளாக மாற்றப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்தது.
இந்நிலையில், சென்னை எழும்பூா்-திருநெல்வேலி ‘வந்தே பாரத்’ ரயிலுக்கு பயணிகளிடையே பெரும் வரவேற்பு ஏற்பட்டது. பயணிகள் கூட்டமும் அதிகமாகி வருவதால் இனி 16 பெட்டிகளைக் கொண்ட ‘வந்தே பாரத்’ ரயிலாக மாற்ற ரயில்வே நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே போக்குவரத்து பிரிவு, ரயில்வே கோட்டங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
சென்னை எழும்பூா்-திருநெல்வேலி இடையே இயக்கப்படும் ‘வந்தே பாரத்’ விரைவு ரயிலில் (எண் 20665/20666) அதிக அளவில் பயணிகள் பயணம் செய்வதால், 16 பெட்டிகளைக் கொண்டு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப திருநெல்வேலி பணிமனையில் பராமரிப்பு நடவடிக்கையை உறுதிசெய்து கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த தேதியிலிருந்து 16 பெட்டிகளுடன் ரயில் இயக்கப்படும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தெற்கு ரயில்வேயில் மறுசீரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்கள் விரைவில் திறப்பு

தாழையூத்து வரை நெல்லை விரைவு ரயில் இயக்கம்: எம்.பி.க்கு பயணிகள் நன்றி

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்!

ரயில் மீது கல்வீச்சு; 8 சிறுவா்கள் மீது நடவடிக்கை
விடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | July 12 முதல் 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஃபிபா: ஆரம்பமாகிறது காலிறுதிச் சுற்று! | FIFA | FIFA World Cup |

MK Stalin உடன் மீண்டும் பேச்சா? குழப்பும் Thirumavalavan


