தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) வெளியீடுசுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை: அமித் ஷா பொறுப்பு - அகிலேஷ் யாதவ்இதுவரை அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை திமுக எடுக்கவில்லை: டி.கே. எஸ். இளங்கோவன்காங்கிரஸ் கட்சிக்கு திமுக கண்டனம்!பாஜகவின் ஏஜென்ட் ஆளுநர்; விஜய் பதவியேற்க அழைத்திருக்க வேண்டும் - கபில் சிபல்திமுக எம்எல்ஏக்களுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!கேரளத்தின் புதிய முதல்வர் யார்? காங்கிரஸ் தலைமைக்கு அதிகாரம் அளிப்பு!ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்! தொங்கு சட்டப்பேரவை என்பது என்ன? இதற்கு முன் தமிழகத்தில் நேரிட்டிருக்கிறதா?ராயபுரத்தில் வென்ற தவெகவின் ஆட்டோ இல்லாத ஆட்டோ ஓட்டுநர்!திமுக - அதிமுக கூட்டணி என்பது பரவிய வதந்தியா? பரப்பப்பட்டதா?ஆட்சியமைக்க அழைக்கப்படுவாரா விஜய்? ஆளுநர் மாளிகை விளக்கம்தவெகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்திருக்க வேண்டும் : கபில் சிபல்அதிமுக எம்எல்ஏக்களைச் சந்திக்க புதுவை செல்கிறார் இபிஎஸ்! ஆளுநரிடம் அழைப்பில்லை! உச்சநீதிமன்றத்தில் முறையிட தவெக முடிவு!தவெக அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை!
/

நெல்லை ‘வந்தே பாரத்’ ரயிலில் இனி 16 பெட்டிகள்: தெற்கு ரயில்வே திட்டம்

சென்னை எழும்பூரிலிருந்து திருநெல்வேலி செல்லும் ‘வந்தே பாரத்’ ரயிலை 16 பெட்டிகளைக் கொண்டு இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :13 நவம்பர் 2024, 1:19 am IST

சென்னை எழும்பூரிலிருந்து திருநெல்வேலி செல்லும் ‘வந்தே பாரத்’ ரயிலை 16 பெட்டிகளைக் கொண்டு இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.

நாடு முழுவதும் முக்கிய நகரங்களுக்கிடையே ஒரே நாளில் சென்று திரும்பும் வகையில் ‘வந்தே பாரத்’ ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆரம்பத்தில், இந்த ரயில்கள் 16 பெட்டிகளைக் கொண்டு இயக்கப்பட்டன. பல வழித்தடங்களில் பயணிகள் குறைவான அளவில் பயணம் மேற்கொண்டதால் அனைத்து ‘வந்தே பாரத்’ ரயில்களும் 8 பெட்டிகளைக் கொண்டு இயக்கப்பட்டன. பயணிகளின் வரவேற்பைப் பொருத்து 16 பெட்டிகளாக மாற்றப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்தது.

இந்நிலையில், சென்னை எழும்பூா்-திருநெல்வேலி ‘வந்தே பாரத்’ ரயிலுக்கு பயணிகளிடையே பெரும் வரவேற்பு ஏற்பட்டது. பயணிகள் கூட்டமும் அதிகமாகி வருவதால் இனி 16 பெட்டிகளைக் கொண்ட ‘வந்தே பாரத்’ ரயிலாக மாற்ற ரயில்வே நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே போக்குவரத்து பிரிவு, ரயில்வே கோட்டங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

சென்னை எழும்பூா்-திருநெல்வேலி இடையே இயக்கப்படும் ‘வந்தே பாரத்’ விரைவு ரயிலில் (எண் 20665/20666) அதிக அளவில் பயணிகள் பயணம் செய்வதால், 16 பெட்டிகளைக் கொண்டு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப திருநெல்வேலி பணிமனையில் பராமரிப்பு நடவடிக்கையை உறுதிசெய்து கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த தேதியிலிருந்து 16 பெட்டிகளுடன் ரயில் இயக்கப்படும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.