
கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையையொட்டிய இந்திய பெருங்கடல் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் திங்கள்கிழமை (நவ.18) முதல் நவ. 23 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் பிறப்பித்துள்ளார். அதேசமயம், சிவகங்ககை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தலைமை ஆசிரியர்களே முடிவெடுக்கலாம் என மவாட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.