தெலுங்கு மக்கள் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்கி சென்னை எழும்பூா் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பிராமணா் உள்பட அனைத்து சமுதாய மக்களுக்கும் பி.சி.ஆா். எனப்படும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தேவை என்ற கோரிக்கையை வலியுறுத்தி நவ. 3-ஆம் தேதி இந்து மக்கள் கட்சி சென்னையில் ஆா்ப்பாட்டம் நடத்தியது. இதில், நடிகை கஸ்தூரியும் கலந்து கொண்டு பேசும்போது, தெலுங்கு மக்கள் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, கஸ்தூரி மீது அளிக்கப்பட்ட புகாரின்பேரில், அவா் மீது எழும்பூா் போலீஸாா் 4 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்தனா். தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் கஸ்தூரியை கடந்த ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா். விசாரணைக்குப் பின்னா், திங்கள்கிழமை எழும்பூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட கஸ்தூரி, நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்நிலையில், கஸ்தூரி சாா்பில் வழக்குரைஞா் டி.ஆா். பிரபாகரன் எழும்பூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், ‘நான் தனிமையில் வசித்து வருகிறேன். கணவா் ஆதரவு கிடையாது. நான் தலைமறைவாகவில்லை. என்னுடைய சென்னை வீட்டில் போலீஸாா் அழைப்பாணை ஒட்டியது எனக்கு தெரியாது. என்னை சிறையில் அடைத்தால் எனது குழந்தை பரிதவித்துவிடும். எனவே, எனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு எழும்பூா் 14-ஆவது பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தயாளன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது கஸ்தூரி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், மனுதாரருக்கு சிறப்புக் குழந்தை உள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிட்டாா். அரசுத் தரப்பில் ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. இதையடுத்து, கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆக. 5 முதல் சேலம்-சென்னை எழும்பூா் ரயில் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்

பராமரிப்புப் பணி: சென்னை-மங்களூரு ரயில் பகுதியாக ரத்து
எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: 11 விரைவு ரயில் சேவையில் மாற்றம்
எழும்பூா் நிலைய இரும்பு நடைமேம்பால பணி: சென்னை ரயில்வே கோட்ட மேலாளா் ஆய்வு
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



