ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவு

10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

அடுத்தாண்டு நடைபெறும் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

செய்தியாளர்களை சந்திக்கும் அமைச்சர் அன்பில் மகேஸ்.

Published On :14 அக்டோபர் 2024, 10:25 am IST

அடுத்தாண்டு நடைபெறும் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திங்கள்கிழமை வெளியிட்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, அடுத்தாண்டு மார்ச் 3 முதல் 25ஆம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடைபெறும்.

பிளஸ் 2 வகுப்புக்கான செய்முறைத் தேர்வு பிப்.7ல் தொடங்கி 14ஆம் தேதி முடிவடையும். அடுத்தாண்டு மார்ச் 5ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை பிளஸ் 1 பொதுத் தேர்வு நடைபெறும்.

பிளஸ் 1 வகுப்புக்கான செய்முறைத் தேர்வு பிப்.15ல் தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெறும்.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28ல் தொடங்கி ஏப்.15ஆம் தேதி வரை நடைபெறும். செய்முறைத் தேர்வு பிப்.22 தொடங்கி பிப்.28ஆம் தேதி வரை நடைபெறும்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதியும், பிளஸ் 1, 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதியும் வெளியிடப்படும்.

தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு விட்டதால் மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

PDF
தேர்வு அட்டவணை முழு விவரம் அறிய....
பார்க்க
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.