மத்திய காஸா பகுதியில் உள்ள பள்ளி மீது இஸ்ரேல் பீரங்கி குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதில் 19 பேர் பலியானார்கள்.
மத்திய காசா பகுதியின் நுசைரத் அகதிகள் முகாமில் இடம்பெயர்ந்தவர்கள் வசிக்கும் பள்ளி மீது இஸ்ரேல் ஞாயிற்றுகிழமை பீரங்கி குண்டு(ஷெல்) வீசித் தாக்குதல் நடத்தியது.
உடனே சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ் குழுவினர் மற்றும் சிவில் பாதுகாப்புப் பிரிவுகள் விரைந்தன. மீட்புக் குழுவினர் 19 சடலங்களை மீட்டனர்.
மேலும் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட காயமடைந்த 80 பேரையும் மீட்டு மத்திய காஸாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர்.
இதனிடையே ஞாயிற்றுக்கிழமை, வடக்கு காஸாவின் அல்-ஷாதி முகாமின் மேற்கில் இஸ்ரேலிய இராணுவத்தால் ஐந்து குழந்தைகள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல்கள் குறித்து இஸ்ரேல் ராணுவம் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி முதல் இஸ்ரேல் - ஹமாஸ் படையினரிடையே போர் நடைபெற்று வருகிறது.
இதில் இதுவரை 42,227 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மண்ணெண்ணெய் குண்டு வீச்சு; குற்றவாளிகளை பிடிக்கச் சென்ற எஸ்.ஐ. மீது தாக்குதல்: 2 போ் கைது

நள்ளிரவில் காஸா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்! 9 பேர் பலி!

தவெக ஆட்சியில் சந்தி சிரிக்கும் சட்டம் - ஒழுங்கு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!







