யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

3 மணி நிலவரம்.. சென்னையில் அடுத்து பெய்யவிருக்கும் மழை!

3 மணி நிலவரப்படி சென்னையில் அடுத்து பெய்யவிருக்கும் மழை நீண்ட கனமழையாக இருக்கும்!

News image
சென்னையில் மழை
Updated On :15 அக்டோபர் 2024, 9:57 am

DIN

சென்னை: காலையில் இருந்த கனமழையைக் காணவில்லையே என்று நினைக்க வேண்டாம்.. சென்னைக்கு மிக அருகே கடல் பரப்பில் மேகக் கூட்டங்கள் காத்திருப்பதாக வானிலை ஆய்வுகளை வெளியிட்டு வரும் தமிழ்நாடு வெதர்மேன் என அறியப்படும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் 3 மணியளவில் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், சென்னைக்கு மிக அருகே, கடல்பரப்பில் மேகக் கூட்டங்கள் காத்திருக்கின்றன. இது விரைவில் சென்னை நகருக்குள் வந்து மிகக் கனமழையை கொடுக்கும். இதனால், சென்னைக்கு அடுத்த சுற்று கனமழை கிடைக்கவிருக்கிறது. கடந்த 6 மணி நேரத்தில் மட்டும் சென்னையில் சில இடங்களில் 150 மி.மீ. க்கும் மேல் மழை பெய்துள்ளது. குறிப்பாக வட சென்னை மற்றும் மத்திய சென்னைப் பகுதிகளில்.

இன்று நள்ளிரவு முதல் பல இடங்களில் 200 மி.மீ.க்கும் மேல் மழை பெய்யும்.

அடுத்து பெய்ய விருக்கும் மழை மிக நீண்டதாக இருக்கும், இன்று இரவு சென்னையை நெருங்கும் மழை மேகங்கள் இன்னமும் பலமானதாகவும் இருக்கும். அதிக மழையைக் கொடுக்கும்.

எனவே மக்களே சார்ஜ் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

மோட்டார் போட்டு தண்ணீர் நிரப்பு தேவையான அளவுக்கு தண்ணீர் பிடித்துக் வைத்துக்கொள்ளுங்கள்.

தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.