டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

வரலாற்றை புதுப்பிக்குமா மழை? வேளச்சேரியில் வெள்ளம்!

மழை வெள்ளம் என்றாலே, வேளச்சேரி நினைவுக்கு வரும் நிலையில், மீண்டு அங்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது.

News image

கனமழை - கோப்புப்படம் - Center-Center-Coimbatore

Updated On :15 அக்டோபர் 2024, 12:18 pm IST

சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், வெள்ளத்துக்குப் பெயர் போன வேளச்சேரியில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கியிருக்கிறது. இதனால், அப்பகுதி மக்கள் துயரமடைந்துள்ளனர்.

வேளச்சேரி, நேருநகர், காமராஜர் தெரு, நேதாஜி ரோடு உள்ளிட்டப் பகுதிகளில் தற்போது இடுப்பளவுக்குத் தண்ணீர் தேங்கியிருக்கிறது. இதனால், மக்கள் சாலைகளில் நடந்து செல்லவும், வாகனங்களை ஓட்டிச்செல்லவும் இயலாமல் அவதியடைந்துள்ளனர்.

சாலையில் செல்லும் கார்கள் பாதியளவுக்கு மேல் மூழ்கும் சூழ்நிலையும் தாழ்வான குடியிருப்புகளில் தண்ணீர் சூழம் நிலையில் மக்கள் அடுத்து என்ன நடக்குமோ? கடந்த கால வெள்ளம் சூழ்ந்த வரலாறுகளை புதுப்பிக்குமோ என்று அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதற்குக் காரணம், செம்பரம்பாக்கம் ஏரிக்கு வெள்ள நீர் செல்லும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டிருப்பதே என்று கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, சென்னை செம்பரம்பாக்கம் ஏரிக்கு வெள்ள நீர் செல்லும் பங்காரு கால்வாயில் அடைப்பு ஏற்பட்டிருப்பதால், இந்தப் பகுதிகளிலிருந்து மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பங்காரு கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், 5க்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்கள் கால்வாயில் அடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. செம்பரம்பாக்கம் ஏரிக்கு பங்காரு கால்வாய் வழியாகத்தான் 50 கிராமங்களில் பெய்த மழை நீர் செல்லும் என்பதால் வேளச்சேரியில் தண்ணீர் வடிய வழியில்லாமல், வெள்ளம் சூழ்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.