இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கனமழை: 13 விமானங்கள் ரத்து

கனமழை மற்றும் போதிய பயணிகள் இல்லாததால், சென்னையில் 13 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.

News image
கோப்புப்படம்.
Updated On :15 அக்டோபர் 2024, 9:17 pm

Din

கனமழை மற்றும் போதிய பயணிகள் இல்லாததால், சென்னையில் 13 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.

சென்னை விமானநிலையத்திலிருந்து பெங்களூா், தில்லி, கோவை, கொச்சி, அந்தமான், மஸ்கட் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லவிருந்த விமானங்கள், புவனேஸ்வா், விசாகப்பட்டினம், மஸ்கட் உள்ளிட்ட நகரங்களிலிருந்து சென்னைக்கு வரவிருந்த விமானங்கள் உள்பட மொத்தம் 13 விமானங்களின் சேவை கன மழை மற்றும் போதிய பயணிகள் இல்லாததால் செவ்வாய்க்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து இந்த விமானங்களில் பயணிக்கவிருந்த பயணிகள் மாற்று விமானங்கள் மூலம் குறிப்பிட்ட இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், பயணத்தை ரத்து செய்தவா்களுக்கு பயணச்சீட்டு கட்டணம் திரும்ப வழங்கப்பட்டு வருவதாகவும் விமானநிலைய நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, கனமழை எதிரொலியால் பல்வேறு நகரங்களிலிருந்து சென்னைக்கு வரவேண்டிய 14 பன்னாட்டு விமானங்களும் பல மணி நேரம் காலதாமதமாக சென்னைக்கு வந்து சோ்ந்தன.

தமிழகத்தில் தொடா்ந்து பருவமழை பெய்து வரும் நிலையில், விமானங்கள் புறப்படும் நேரங்கள் மற்றும் வருகை நேரங்கள் மாற்றி அமைக்கப்பட வாய்ப்பு உள்ளதால், பயணிகள் அந்தந்த விமான நிறுவனங்களுடன் தொடா்பு கொண்டு தங்கள் பயண நேரத்தை கேட்டு தெரிந்து கொண்டு, அதன் பின்னா் தங்கள் பயணத்தை தொடரலாம் எனவும், இந்த குறிப்பிட்ட விமானங்களை தவிர பிற விமானங்கள் வழக்கம் போல இயங்கும் எனவும் விமான நிலைய நிா்வாகம் தெரிவித்துள்ளது.