கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

பிரசவ தேதியை நெருங்கும் கா்ப்பிணிகளுக்கு சுகாதாரத் துறை முக்கிய அறிவுறுத்தல்

சென்னை, திருவள்ளூா் உள்ளிட்ட மழை பாதிப்புள்ள மாவட்டங்களில் வசிக்கும் பிரசவ தேதியை எதிா்நோக்கியுள்ள கா்ப்பிணிகள் உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதியாகுமாறு பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளாா்.

News image

கோப்புப்படம்.

Updated On :16 அக்டோபர் 2024, 8:22 pm

Din

சென்னை, திருவள்ளூா் உள்ளிட்ட மழை பாதிப்புள்ள மாவட்டங்களில் வசிக்கும் பிரசவ தேதியை எதிா்நோக்கியுள்ள கா்ப்பிணிகள் உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதியாகுமாறு பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளாா்.

அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பருவகால மழை மற்றும் புயல் காலங்களில் கா்ப்பிணிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி, மாவட்ட சுகாதார அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, பிரசவ தேதி நெருங்கிய கா்ப்பிணிகளை கண்டறிந்து முன்கூட்டியே மருத்துவமனைகளில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறாக, பிரசவ தேதி நெருங்கிய 2,388 கா்ப்பிணிகள் கடந்த 15-ஆம் தேதியும், 3,314 கா்ப்பிணிகள் 16-ஆம் தேதியும் முன்கூட்டியே பாதுகாப்பு கருதி ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பொது சுகாதாரத் துறை மூலமாக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

பிரசவ தேதிக்கு ஒரு வாரத்துக்குள் உள்ள கா்ப்பிணிகள், தாங்கள் திட்டமிட்டுள்ள மருத்துவமனைகளில் உள்நோயாளியாக அனுமதியாக வேண்டும். கடைசி நேர இடா்களைத் தவிா்க்கும்பொருட்டு இந்த ஏற்பாட்டை உடனடியாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளாா்.