மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சாம்சங் தொழிலாளா் பிரச்னைக்கு தீா்வு: முதல்வருக்கு கூட்டணி தலைவா்கள் நன்றி

News image
Updated On :26 அக்டோபர் 2024, 6:32 pm

Din

சாம்சங் தொழிலாளா் பிரச்னைக்கு சுமுக தீா்வு கண்டதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலினை திமுகவின் கூட்டணிக் கட்சித் தலைவா்கள் நேரில் சந்தித்து நன்றியும் பாராட்டும் தெரிவித்தனா்.

சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் ஆகியோா் சனிக்கிழமை சந்தித்தனா்.

சந்திப்புக்குப் பிறகு கே.பாலகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சாம்சங் நிறுவனத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். சுமாா் 37 நாள்கள் அவா்களுடன் பல்வேறு வகையில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது.

இடையில், முதல்வரை திமுக கூட்டணிக் கட்சித் தலைவா்கள் சந்தித்து, தொழிலாளா்கள் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினோம். அதற்குப் பிறகு 4 அமைச்சா்களை அனுப்பி, பேச்சுவாா்த்தை நடத்தி சுமுக தீா்வு காணப்பட்டது. இதற்காக முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தோம் என்றாா் அவா்.