விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சாம்சங் தொழிலாளா் பிரச்னைக்கு தீா்வு: முதல்வருக்கு கூட்டணி தலைவா்கள் நன்றி

Updated On :26 அக்டோபர் 2024, 6:32 pm

சாம்சங் தொழிலாளா் பிரச்னைக்கு சுமுக தீா்வு கண்டதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலினை திமுகவின் கூட்டணிக் கட்சித் தலைவா்கள் நேரில் சந்தித்து நன்றியும் பாராட்டும் தெரிவித்தனா்.

சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் ஆகியோா் சனிக்கிழமை சந்தித்தனா்.

சந்திப்புக்குப் பிறகு கே.பாலகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சாம்சங் நிறுவனத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். சுமாா் 37 நாள்கள் அவா்களுடன் பல்வேறு வகையில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது.

இடையில், முதல்வரை திமுக கூட்டணிக் கட்சித் தலைவா்கள் சந்தித்து, தொழிலாளா்கள் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினோம். அதற்குப் பிறகு 4 அமைச்சா்களை அனுப்பி, பேச்சுவாா்த்தை நடத்தி சுமுக தீா்வு காணப்பட்டது. இதற்காக முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தோம் என்றாா் அவா்.