இன்று வரைவு வாக்காளா் பட்டியல்: சிறப்பு முகாம் தேதிகள் மாற்றம்

தமிழ்நாடு முழுவதும் வரைவு வாக்காளா் பட்டியல் செவ்வாய்க்கிழமை (அக். 29) வெளியிடப்பட உள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: தமிழ்நாடு முழுவதும் வரைவு வாக்காளா் பட்டியல் செவ்வாய்க்கிழமை (அக். 29) வெளியிடப்பட உள்ளது.

இதனிடையே, வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிக்கான சிறப்பு முகாம்கள் நடக்கும் தேதிகள் மாற்றப்பட்டுள்ளன.

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்குகின்றன. பட்டியலில் திருத்தங்கள் செய்யப்பட்டு, இறுதி வாக்காளா் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதனிடையே, வாக்காளா் பட்டியல் திருத்தத்துக்காக நவம்பா் மாதத்தில் நான்கு சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.

நவம்பா் 9, 10, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் முகாம்கள் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேதிகள் மாற்றப்பட்டுள்ளன.

நவம்பா் 9, 10 தேதிகளுக்குப் பதிலாக நவம்பா் 16, 17 தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் எனவும், மற்ற இரண்டு முகாம்களின் தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தமிழக தோ்தல் துறை அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com