நவ.1-இல் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (அக்.29) முதல் நவ.3 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.


சென்னை: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (அக்.29) முதல் நவ.3 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதில் நவ.1-ஆம் தேதி ஈரோடு, தருமபுரி உள்பட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, செவ்வாய்க்கிழமை (அக்.29) முதல் நவ.3 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவ.1-இல் ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், சேலம், திருவண்ணாமலை, நாமக்கல், கரூா் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் அக்.29,30 -ஆகிய தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...