27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

29 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ரூ. 30 லட்சம்!

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து 29 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ரூ. 31.95 லட்சத்திற்கான காசோலை.

News image

விளையாட்டு வீரர், வீராங்கனைகளுடன் உதயநிதி ஸ்டாலின் - DIPR

Updated On :29 அக்டோபர் 2024, 5:52 pm IST

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து 29 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ரூ. 31.95 லட்சத்திற்கான காசோலைகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

ஒரு சைக்கிள் பந்தைய வீரருக்கு ரூ. 8.60 லட்சம் மதிப்பிலான அதிநவீன பந்தைய சைக்கிள் என மொத்தம் 30 விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு 40,55,000 ரூபாய்க்கான விளையாட்டு போட்டிகளுக்கான உதவிகளை வழங்கினார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து, சீனாவில் வருகின்ற டிச. 1 முதல் 7-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள 4 வது உலக ஜூனியர் சாப்ட் டென்னிஸ் போட்டியில் (சிறுவர் மற்றும் சிறுமியர்) கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ள 24 வீரர், வீராங்கனைகளுக்கு போட்டிக்கான செலவினமாக தலா ரூ.1,00,000 ரூபாய் வீதம் 24,00,000 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

தாய்லாந்து நாட்டில் 1.12.2024 முதல் 7.12.2024 வரை நடைபெறவுள்ள உலக திறன் விளையாட்டு இளைஞர் போட்டியில் கலந்து கொள்ள உள்ள 5 நரம்பியல் சார் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு விமான கட்டணம், தங்குமிட செலவினம் மற்றும் போட்டிக்கான நுழைவு கட்டணத்திற்க்கான மொத்த செலவுத்தொகை 7,95,000 ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

சைக்கிளிங் விளையாட்டு வீரர் திரு.சூர்யபிரகாஷ் அவர்களுக்கு ரூ.8,60,000/- மதிப்பிலான அதிநவீன பந்தய சைக்கிளை வழங்கினார்.

ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து மொத்தம் 30 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.40,55,000 ரூபாய்க்கான விளையாட்டு போட்டிகளுக்கான உதவிகளை வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.