
சென்னையின் சென்ட்ரல், எழும்பூர், அமைந்தகரை, கோயம்பேடு, தியாகராய நகர், மாம்பலம், கோடம்பாக்கம், வளசரவாக்கம், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே பரவலாக மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மதுரை, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.