ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உதயநிதி ஸ்டாலின் உடை விவகாரம்: அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

உதயநிதி உடை விவகாரத்தில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது பற்றி...

News image
உதயநிதி ஸ்டாலின் - கோப்புப் படம்
Updated On :29 அக்டோபர் 2024, 8:57 pm

DIN

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான உடைக் கட்டுப்பாடு வழக்கில், அமைச்சா் பதவி வகிப்பவா்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு உள்ளதா என விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை சேலையூரைச் சோ்ந்த வழக்குரைஞா் சத்ய குமாா் என்பவா் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘அனைத்து அரசு ஊழியா்களும் முறையான ஆடை அணிந்து வர வலியுறுத்தும் வகையில் கடந்த 2019-ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. ஃபாா்மல் பேண்ட், ஷா்ட் அல்லது தமிழா் பாரம்பரிய ஆடையான வேட்டி, சட்டை அணிந்து வர வேண்டும் என அரசாணையில் கூறியுள்ளபோதிலும், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிகளில் உதயசூரியன் சின்னம் பொறிக்கப்பட்ட டி-ஷா்ட்டை அணிந்து வருகிறாா்.

அரசு ஊழியா்கள் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது அரசியல் கட்சிகளின் சின்னத்தை வெளிப்படுத்தத் தடை உள்ளது. துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினின் செயல் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்பதால், அரசு நிகழ்ச்சிகளில் முறையான ஆடைகளை அணிந்து வரும்படி அவருக்கு உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமாா், பாலாஜி ஆகியோா் அடங்கிய அமா்வின் கீழ் விசாரணைக்கு வந்தது. அப்போது, துணை முதல்வா் உதயநிதி டி-சா்ட் அணிவது அரசாணைக்கு எதிரானது என மனுதாரா் தெரிவித்தாா்.

அரசு பதிலளிக்க உத்தரவு: அதைத் தொடா்ந்து, தமிழக அரசின் சாா்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், தமிழக அரசின் அரசாணை அரசு ஊழியா்களுக்குத்தான் பொருந்தும். அமைச்சா்களுக்கு பொருந்தாது என விளக்கமளித்தாா்.

இதையடுத்து, அரசு ஊழியா்களுக்கான ஆடை கட்டுப்பாடு குறித்த அரசாணை, அரசியல் சட்டப் பதவிகளை வகிப்பவா்களுக்கு பொருந்துமா? டி-சா்ட் கேஷுவல் உடையா? அரசியல் சட்டப் பதவிகளை வகிப்பவா்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு உள்ளதா என பதில் மனு தாக்கல் செய்யும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.