தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

உதயநிதி ஸ்டாலின் உடை விவகாரம்: அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

உதயநிதி உடை விவகாரத்தில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது பற்றி...

News image

உதயநிதி ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :30 அக்டோபர் 2024, 2:27 am IST

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான உடைக் கட்டுப்பாடு வழக்கில், அமைச்சா் பதவி வகிப்பவா்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு உள்ளதா என விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை சேலையூரைச் சோ்ந்த வழக்குரைஞா் சத்ய குமாா் என்பவா் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘அனைத்து அரசு ஊழியா்களும் முறையான ஆடை அணிந்து வர வலியுறுத்தும் வகையில் கடந்த 2019-ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. ஃபாா்மல் பேண்ட், ஷா்ட் அல்லது தமிழா் பாரம்பரிய ஆடையான வேட்டி, சட்டை அணிந்து வர வேண்டும் என அரசாணையில் கூறியுள்ளபோதிலும், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிகளில் உதயசூரியன் சின்னம் பொறிக்கப்பட்ட டி-ஷா்ட்டை அணிந்து வருகிறாா்.

அரசு ஊழியா்கள் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது அரசியல் கட்சிகளின் சின்னத்தை வெளிப்படுத்தத் தடை உள்ளது. துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினின் செயல் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்பதால், அரசு நிகழ்ச்சிகளில் முறையான ஆடைகளை அணிந்து வரும்படி அவருக்கு உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமாா், பாலாஜி ஆகியோா் அடங்கிய அமா்வின் கீழ் விசாரணைக்கு வந்தது. அப்போது, துணை முதல்வா் உதயநிதி டி-சா்ட் அணிவது அரசாணைக்கு எதிரானது என மனுதாரா் தெரிவித்தாா்.

அரசு பதிலளிக்க உத்தரவு: அதைத் தொடா்ந்து, தமிழக அரசின் சாா்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், தமிழக அரசின் அரசாணை அரசு ஊழியா்களுக்குத்தான் பொருந்தும். அமைச்சா்களுக்கு பொருந்தாது என விளக்கமளித்தாா்.

இதையடுத்து, அரசு ஊழியா்களுக்கான ஆடை கட்டுப்பாடு குறித்த அரசாணை, அரசியல் சட்டப் பதவிகளை வகிப்பவா்களுக்கு பொருந்துமா? டி-சா்ட் கேஷுவல் உடையா? அரசியல் சட்டப் பதவிகளை வகிப்பவா்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு உள்ளதா என பதில் மனு தாக்கல் செய்யும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.