மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

ஓணம் விடுமுறை: சென்னையிலிருந்து நாளை சிறப்பு ரயில்கள் இயக்கம்

சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள்

News image
Updated On :12 செப்டம்பர் 2024, 12:46 pm

DIN

கேரளத்தில் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை, ஞாயிற்றுக்கிழமை(செப். 15) கொண்டாடப்படுகிறது. இதையடுத்து சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை(செப். 13) சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருவனந்தபுரத்தின் கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்(06160) நாளை(செப். 13) பிற்பகல் 3.15 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரயில் கொச்சுவேலிக்கு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்றடையும்.

இந்த ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர்(கோவை), பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், சங்கனாசேரி, திருவல்லா, செங்கன்னூர், மாவேலிக்கரா, காயங்குளம், கொல்லம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மேற்கண்ட ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

அதேபோல, நாளை(செப். 13) பிற்பகல் 3.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மங்களூருக்கு சிறப்பு ரயில்(06161) புறப்படுகிறது. இந்த ரயில் மங்களூருக்கு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்றடையும்.

இந்த ரயில் பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, சொரனூர், திரூர், கோழிக்கோடு, வடகரா, தலசேரி, கண்ணூர், பையனூர், நீலேஸ்வரம், காசர்கோடு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமார்க்கத்தில், இந்த சிறப்பு ரயில்(06162) ஞாயிற்றுக்கிழமை(செப்.15) மாலை 6.45 மணிக்கு மங்களூரிலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடையும்.

கண்ணூருக்கும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு ரயில்(06163) சனிக்கிழமை(செப். 14) இரவு 11.50 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரயில் மங்களூருக்கு மறுநாள் பகல் 1.30 மணிக்கு சென்றடையும்.

இந்த ரயில் பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, சொரனூர், திரூர், கோழிக்கோடு, வடகரா, தலசேரி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமார்க்கத்தில், திங்கள்கிழமை(செப்.16) கண்ணூரிலிருந்து பகல் 3.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்(06164) மறுநாள் காலை 7.55 மணிக்கு சென்றடையும்.

மேற்கண்ட ரயில்களுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.