/

ஆளுநர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த அமைச்சர்!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றுள்ள பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்.

News image
மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி- dotcom
Updated On :18 செப்டம்பர் 2024, 6:34 am

DIN

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றுள்ள பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்.

நாகப்பட்டினத்தில் டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்று 391 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

மீன் வளப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.

மீன் வளப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.

இந்த நிகழ்வில் பல்கலைக்கழக இணை வேந்தர் மற்றும் மீன்வளத் துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.

Story image

அழைப்பிதலில் பெயர் இல்லாததால் மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

நேற்று வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாகிரக நினைவுத் தூணில் அஞ்சலி செலுத்தும் நிகழ்விலும் மாவட்ட ஆட்சியர் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.