தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் வாகனம் மோதி 2 பேர் பலி!

இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் சம்பவ இடத்தில் பலி.

pudhukottai

விபத்து நடைபெற்ற இடம். - Din

Published On :

புதுக்கோட்டை: புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியரின் வாகனம் மோதி, இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் பா. ஐஸ்வர்யா, தனது அரசு வாகனத்தில் திருமயம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை முற்பகலில் புறப்பட்டார்.

லெம்பலக்குடி சுங்கச்சாவடி தாண்டி சென்றபோது, நகரத்துப்பட்டி அருகே எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது திடீரென மோதியது.

இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இருவரும் பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

வருவாய்க் கோட்டாட்சியரின் வாகன ஓட்டுநர் காமராஜுவுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. வருவாய்க் கோட்டாட்சியர் பா. ஐஸ்வர்யாவுக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, நமணசமுத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.