பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் மீது மூன்று சட்டப்பிரிவுகளின் கீழ் தர்மபுரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தர்மபுரியில் நடைபேற்ற 'என் மண் என் மக்கள்' பேரணியின்போது பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள செயின்ட் லோர்டெஸ் தேவாலயத்தில் உள்ள மேரி மாதா சிலைக்கு மாலை அணிவிக்க முயன்ற அண்ணாமைலை கிறிஸ்தவ இளைஞர்கள் சிலரால் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் அண்ணாமலைக்கும் அந்த இளைஞர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அவரைத் தடுத்த இளைஞர்கள் மணிப்பூரில் நடக்கும் வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு அண்ணாமலைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
இது தொடர்பான காணொலி வலைதளத்தில் பரவியது. அதில் மணிப்பூர் பிரச்னை குறித்து அண்ணாமலை விவரிக்கு முயல்வதும், 'உங்களுக்கு என்னைத் தடுக்க என்ன உரிமை உள்ளது? இப்போதே நான் 10,000 பேருடன் தர்ணாவில் ஈடுபட்டால் என்ன செய்வீர்கள்' என வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் காணொலியில் இடம்பெற்றது.
கார்த்திக் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் 153 (A), 504 மற்றும் 505 (2) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் தர்மபுரியில் உள்ள பொம்மிடி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை விரும்பும் மக்கள்: திருமாவளவன் கருத்து!

புதிய வரலாறு! திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் அதிமுக வெற்றி!
4 தொகுதிகளில் வெற்றி... தமிழக மக்களுக்கு நன்றி: அன்புமணி இராமதாஸ் அறிக்கை!

புதுவைப் பேரவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த தலைவர்கள்!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

