அதிமுகவின் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைக் குழு நாளை முதல்முறையாக கூடுகிறது.
மக்களவைத் தோ்தல் நெருங்கும் நிலையில், அதற்கான ஆயத்தப் பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சு நடத்துவதற்காக தொகுதிப் பங்கீட்டுக் குழுவை திமுகவும், மதிமுகவும் ஏற்கெனவே அறிவித்த நிலையில் அதிமுகவும் தொகுதிப் பங்கீட்டு குழுவை அறிவித்திருந்தது.
அதிமுக துணைப் பொதுச்செயலா் கே.பி.முனுசாமி தலைமையில் 5 போ் குழுவை அமைத்து, அக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அறிவித்தார். இந்த நிலையில் அதிமுகவின் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைக் குழு நாளை முதல்முறையாக கூடுகிறது.
கூட்டணிக் கட்சிகளுடன் நடத்த வேண்டிய பேச்சுவார்த்தை குறித்து நாளை முக்கிய ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளனர். தேர்தல் அறிகைக் குழு கடந்த வாரம் கூடிய நிலையில், தொகுதிப் பங்கீட்டுக் குழு நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.