மக்களவைத் தோ்தல் நெருங்கும் நிலையில், அதற்கான ஆயத்தப் பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சு நடத்துவதற்காக தொகுதிப் பங்கீட்டுக் குழுவை திமுகவும், மதிமுகவும் ஏற்கெனவே அறிவித்த நிலையில் அதிமுகவும் தொகுதிப் பங்கீட்டு குழுவை அறிவித்திருந்தது.
தமிழகத்தில் மக்களவைத் தோ்தலுக்காக கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக, திமுக சாா்பில் ஏற்கெனவே குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் டி.ஆா்.பாலு, முதன்மைச் செயலா் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலா்கள் ஐ.பெரியசாமி, ஆ.ராசா, கடலூா் கிழக்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.
இந்தக் குழுவானது காங்கிரஸ் கட்சியின் நிா்வாகிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடா்பாக இன்று மாலை பேச்சு நடத்த உள்ளது. திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் பிற்பகல் 3 மணியளவில் கூட்டம் நடைபெறவுள்ளது. பேச்சுவாா்த்தையின்போது காங்கிரஸ் சாா்பில் முன்னாள் மத்திய அமைச்சா்கள் முகுல் வாஸ்னிக், சல்மான் குா்ஷித், தமிழகப் பொறுப்பாளா் அஜோய் குமாா் மற்றும் மாநிலப் பொறுப்பாளா்கள் இடம்பெறுவா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: தொகுதிப் பட்டியலைத் தயாரிக்கவில்லை: காங். விளக்கம்
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் போட்டியிட விரும்பும் 21 தொகுதிகளைக் கொண்ட பட்டியலை தயாரித்துள்ளது. கடந்த முறை வென்ற கரூர், ஆரணி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், திருச்சி, சிவகங்கை, தேனி, கன்யாகுமரி, விருதுநகர் தொகுதிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
மேலும் சில புதிய தொகுதிகளைத் திமுகவிடம் கேட்க உள்ளனர். இதில், புதிதாக தஞ்சாவூர், திருநெல்வேலி, ராமநாதபுரம், தென்காசி, திருவண்ணாமலை, திண்டுக்கல், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, காஞ்சிபுரம், தென் சென்னை, அரக்கோணம் ஆகிய தொகுதிகளைப் பட்டியலில் இணைத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெற்ற நடிகரான ரன்வீர் சிங்!

இங்கிலாந்துக்கு 50% அபராதம்! டெஸ்ட் சாம்பியன்ஷிப் 12 புள்ளிகள் குறைப்பு!

தவெக எம்எல்ஏ பல்லவி அளித்த மனு மீது நடவடிக்கை இல்லை! பேரவைத் தலைவர்

அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் இஸ்ரேலை மோடி கண்டிக்க வேண்டும்: இந்தியக் கம்யூனிஸ்ட்
விடியோக்கள்

அமோனியா வாயு கசிவு விபத்து பற்றி அமைச்சர் விளக்கம்! | TN assembly

முதல்வர் விஜய்க்கு பேரவைத் தலைவர் பிறந்தநாள் வாழ்த்து! | TN Assembly | CM Vijay
Valaipechu Anthanan Interview | மணிக்கணக்கில் புத்தகம் படிக்கிறார் விஜய்!



