பிப். 18-ல் மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 18 ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்திற்கு வருகிறார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 18 ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்திற்கு வருகிறார். 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைப்பயண நிறைவு விழா பொதுக் கூட்டம் திருப்பூரில் நடைபெறுகிறது. இந்த நிறைவு விழா பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து, பிரதமர் மோடி பாஜக நிர்வாகிகளை சந்தித்து மக்களவைத் தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் என் மண் என் மக்கள் நடைப்பயணத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு  வருகிறார். திருவண்ணாமலை மாவட்டத்தில் செவ்வாய், புதன்கிழமைகளில் (ஜனவரி 30, 31) என் மண், என் மக்கள் பிரசார நடைப்பயணம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com