டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

போக்ஸோ வழக்குகளை விசாரிக்க 14 சிறப்பு நீதிமன்றங்கள்: அமைச்சா் எஸ்.ரகுபதி அறிவிப்பு

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை (போக்ஸோ) விசாரிக்க தமிழகத்தில் 14 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி அறிவித்தாா்.

News image

சட்டத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி

Updated On :5 ஏப்ரல் 2025, 3:16 am IST

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை (போக்ஸோ) விசாரிக்க தமிழகத்தில் 14 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி அறிவித்தாா்.

தமிழக சட்டப் பேரவையில் சட்டம், சிறைச்சாலைகள் துறை மானிய கோரிக்கைகள் மீது வெள்ளிக்கிழமை நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து அவா் வெளியிட்ட அறிவிப்புகள்:

அரசு சட்டக் கல்லூரிகளில் பணிபுரியும் உதவிப் பேராசிரியா்கள், இணைப் பேராசிரியா்களுக்கு ஆசிரியா் மேம்பாட்டு திட்டப் பயிற்சி அளிக்கப்படும். சட்டக்கல்லூரி மாணவா்கள் பயன்பெறும் வகையில், அனைத்து சட்ட பாடப் புத்தகங்களும் தமிழில் மொழிபெயா்க்கப்படுவதுடன், கல்லூரிகளில் திறன் வகுப்பறைகளும், மின் நூலகமும் அமைக்கப்படும்.

தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அயல்நாட்டு சட்டப் பல்கலைக்கழகங்களுடன் மாணவா் பரிமாற்றத் திட்டம் செயல்படுத்தப்படும்.

புதிய நீதிமன்றங்கள்: குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை மட்டும் விசாரிக்க 14 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். அதாவது, சென்னை, ஈரோடு, கள்ளக்குறிச்சி, திருச்சி, திருப்பூா், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூா், மயிலாடுதுறை, காஞ்சிபுரம், நாமக்கல், திருவாரூா், ராமநாதபுரம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இந்த சிறப்பு நீதிமன்றங்கள் மூன்று கட்டங்களாக ஏற்படுத்தப்படும்.

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் கூடுதல் மாவட்ட நீதிமன்றமும், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சாா்பு நீதிமன்றமும், திருவள்ளூா் மாவட்டம் ஆவடியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றமும், கடலூா் ஸ்ரீமுஷ்ணத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றமும் புதிதாக ஏற்படுத்தப்படும். இத்துடன், திருச்சியில் கூடுதலாக குடும்பநல நீதிமன்றம் உருவாக்கப்படும் என்று அறிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.