சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

அந்த தியாகி யார்? பேரவைக்குள் பேட்ஜ் அணிந்துவந்த அதிமுகவினர்!

பேரவைக்குள் பேட்ஜ் அணிந்துவந்த அதிமுகவினர் தொடர்பாக...

News image

பேரவைக்குள் பேட்ஜ் அணிந்துவந்த அதிமுகவினர்!

Updated On :7 ஏப்ரல் 2025, 10:32 am IST

’அந்த தியாகி யார்’ என எழுதப்பட்ட பேட்ஜ் அணிந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைக்குள் வருகை தந்துள்ளனர்.

சட்டப்பேரவை கூட்டத் தொடர் வழக்கம்போல காலை 9.30 மணிக்கு தொடங்கியது. வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்கிட நிலையில், அமைச்சரின் பதிலுரையும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், டாஸ்மாக்கில் ஊழல் நடைபெறுவதைக் குறிப்பிடும் வகையில் சட்டையில் ’அந்த தியாகி யார்’ என எழுதப்பட்ட பேட்ஜ் அணிந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைக்குள் வருகை தந்துள்ளனர்.

மக்களுக்கு 1,000 ரூபாய் கொடுப்பதுபோல கொடுத்து ரூ. 1,000 கோடி ஊழல் செய்த அந்த தியாகி யார்?’ என்றும் கேள்வி எழுப்பி அதிமுக சார்பில் தமிழக முழுவதும் போஸ்டர்கள் ஓட்டப்பட்டு வந்த நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பேரவைக்கு வந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.