நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விழுப்புரம் வழியாகச் செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றம்

ரயில்வே பராமரிப்புப் பணி மேற்கொள்ளவுள்ளதால் விழுப்புரம் வழியாகச் செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

News image
Updated On :7 ஏப்ரல் 2025, 10:08 pm

Din

சென்னை: திருச்சி ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பகுதியில், ரயில்வே பராமரிப்புப் பணி மேற்கொள்ளவுள்ளதால் விழுப்புரம் வழியாகச் செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு:

தாம்பரத்திலிருந்து விழுப்புரத்துக்கு காலை 9.45-க்கு புறப்படும் மெமு ரயில், ஏப். 9, 16 ஆகிய தேதிகளில் விக்கிரவாண்டி வரை மட்டும் இயக்கப்படும். அதேபோல், சென்னை எழும்பூரிலிருந்து புதுச்சேரிக்கு காலை 6.35-க்கு புறப்படும் மெமு ரயில் ஏப். 9, 16 ஆகிய தேதிகளில் விழுப்புரம் வரை மட்டும் இயக்கப்படும்.

மறுமாா்க்கமாக விழுப்புரம் - சென்னை கடற்கரை இடையே பிற்பகல் 1.40-க்கு இயக்கப்படும் மெமு ரயில் ஏப். 9, 16 ஆகிய தேதிகளில் விக்கிரவாண்டியிலிருந்து இயக்கப்படும். விழுப்புரம் - மயிலாடுதுறை மெமு ரயில் சோ்ந்தனூரில் இருந்தும், புதுச்சேரி - திருப்பதி மெமு ரயில் முண்டியம்பாக்கத்திலிருந்தும் ஏப். 9, 16 ஆகிய தேதிகளில் புறப்படும்.

சென்னை எழும்பூரிலிருந்து காலை 10.20-க்கு புறப்படும் குருவாயூா் விரைவு ரயில் 1 மணி நேரம் 30 நிமிஷம் தாமதமாக புறப்பட்டுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.