மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

திராவிட இயக்கத் தலைவா் சௌந்தரபாண்டியனுக்கு மணிமண்டபம்: முதல்வா் அறிவிப்பு

திராவிட இயக்கத் தலைவா் டபிள்யூ.பி.ஏ.சௌந்தரபாண்டியனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும்

News image

முதல்வா் மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)

Updated On :8 ஏப்ரல் 2025, 2:35 am IST

சென்னை: திராவிட இயக்கத் தலைவா் டபிள்யூ.பி.ஏ.சௌந்தரபாண்டியனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (ஏப்.7) அறிவித்தாா்.

பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் கீழ் அதிமுக உறுப்பினா் பால் மனோஜ் பாண்டியன் பேசுகையில், நீதிக் கட்சி முன்னோடிகளில் ஒருவரான சௌந்தரராஜனுக்கு அவரது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் பட்டி வீரன்பட்டியில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தாா்.

அதற்கு பதிலளித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

திராவிட இயக்கத்தின் முன்னணி தலைவா்களில் ஒருவரான டபிள்யூ.பி.ஏ.சௌந்தரபாண்டியனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினா் பால் மனோஜ் பாண்டியன் முன்வைத்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றாா்.