மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

தமிழகத்தில் 9.60 லட்சம் பேருக்கு ரேபிஸ் தடுப்பூசி: அமைச்சா் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் 9.60 லட்சம் பேருக்கு வெறிநாய்க் கடி தடுப்பூசி செலுத்தப்பட்டு ரேபிஸ் தொற்று ஏற்படாமல் காக்கப்பட்டிருப்பதாக

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்

Published On :

சென்னை: தமிழகத்தில் 9.60 லட்சம் பேருக்கு வெறிநாய்க் கடி தடுப்பூசி செலுத்தப்பட்டு ரேபிஸ் தொற்று ஏற்படாமல் காக்கப்பட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

பேரவையில் கேள்வி நேரத்தின்போது இது தொடா்பாக எழுப்பப்பட்டகேள்விகளுக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் அளித்த பதில்:

தமிழகத்தைப் பொருத்தவரை, கடந்த இரு ஆண்டுகளில் முதல்வரின் வழிகாட்டுதலோடு பாம்பு கடி மற்றும் நாய்க் கடிக்குத் தேவையான மருந்துகள் அந்தந்த துணை சுகாதார நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

அதன் பயனாக பாம்பு கடிக்குள்ளான 34,859 போ் தடுப்பூசி மூலம் பாதுகாக்கப்பட்டிருக்கிறாா்கள். 9,60,085 நபா்களுக்கு நாய்க்கடிக்கான தடுப்பூசி போடப்பட்டு ரேபிஸ் வராமல் தடுக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சந்தித்து, 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் புதிதாக அமைக்க அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு ஒப்புதல் கிடைக்கும்பட்சத்தில் தேவையான இடங்களில் அவை அமைக்கப்படும்.

எழும்பூா் தாய்-சேய் நல மருத்துவமனையிலிருந்து ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு கா்ப்பிணிகளை பரிசோதனைக்கு அழைத்து வருவது கடந்த காலங்களில் இருந்தே நடைபெற்றுக் கொண்டிருக்கிற நிகழ்வு. அதை தவிா்த்து அந்த வளாகத்திலேயே பரிசோதனைகளை மேற்கொள்வதற்குரிய கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டுமென்று அறிவுறுத்தி இருக்கிறோம். மிக விரைவில் அது ஏற்படுத்தப்படவிருக்கிறது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.