அமைச்சர் நேருவின் சகோதரர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

அமைச்சர் நேருவின் சகோதரர் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை பற்றி...
திருச்சியில் நடைபெற்ற சோதனை.
திருச்சியில் நடைபெற்ற சோதனை.EPS
Published on
Updated on
1 min read

தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் வீடு, அலுவலகங்களில் 3 நாள்களாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்தது.

அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மற்றும் மகன் அருண் நேரு பங்குதாரர்களாக உள்ள கட்டுமான நிறுவனத்தில் நடைபெற்ற பணப்பரிவர்த்தனைகள் தொடர்பாக அமலாக்கத்துறையினர் கடந்த 7 ஆம் தேதி சோதனையைத் தொடங்கினர்.

சென்னை, திருச்சியில் அமைச்சர் நேரு, அவரது சகோதரர் ரவிச்சந்திரன், மகன் அருண் நேரு உள்ளிட்டோருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வந்தனர்.

இதில், ரவிச்சந்திரனை மட்டும் அழைத்துச் சென்ற அமலாக்கத்துறையினர் அவரிடம் 5 மணிநேரத்துக்கு மேலாக செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர்.

அவரிடம் கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்னையில் பல்வேறு இடங்களில் தொடர் சோதனையில் அமலாக்கத்துறையினர் ஈடுபட்ட நிலையில், நேற்று மாலையும் ரவிச்சந்திரனிடம் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், 72 மணிநேரத்துக்கு மேலாக நடைபெற்ற சோதனையில் பல்வேறு ஆவணங்களை அமலாக்கத்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இந்த ஆவணங்களின் அடிப்படையில் ரவிச்சந்திரனிடம் தொடர் விசாரணையில் ஈடுபட அமலாக்கத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com