அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

இசையமைப்பாளரான இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் சகோதரர்!

ஆதிக் ரவிச்சந்திரன் சகோதரர் குறித்து...

News image

ஆதிக் ரவிச்சந்திரன் தன் சகோதரர் மனு ரவிச்சந்திரன்

Updated On :7 ஜூலை 2026, 2:57 pm IST

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் சகோதரர் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார்.

த்ரிஷா இல்லன்னா நயன்தாரா திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். தொடர்ந்து, நடிகர் சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை இயக்கினார். அப்படம் தோல்விப்படமானது. பின், இடைவெளிவிட்டு நடிகர்கள் விஷால், எஸ்ஜே சூர்யாவை வைத்து, ‘மார்க் ஆண்டனி’ படத்தை இயக்கினார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று ரூ. 100 கோடி வசூலித்து வெற்றிப்படமானது.

அடுத்ததாக, நடிகர் அஜித் குமாரை வைத்து, ‘குட் பேட் அக்லி’ என்கிற திரைப்படத்தை ஆதிக் இயக்கினார். இப்படம் பெரிய வரவேற்பைப் பெற்று, ரூ. 250 கோடி வரை வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. தற்போது, அஜித்தின் 64-வது படத்தையும் ஆதிக் இயக்கவுள்ளார்.

இந்த நிலையில், ஆதிக்கின் சகோதரர் மனு ரவிச்சந்திரன் ரேனிகுண்டா - 2 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார். தன் சகோதரர் திரைத்துறைக்கு அறிமுகமாகவுள்ளதை மகிழ்ச்சியுடன் புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளார்.

Director Adhik Ravichandran's brother is set to make his debut as a music composer.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.