கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

சென்னை எம்.சி.ராஜா கல்லூரி மாணவா் விடுதி: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

News image
சென்னை சைதாப்பேட்டையில் புதிய விடுதிக் கட்டடத்தில் வைக்கப்பட்ட எம்.சி.ராஜாவின் புகைப்படத்தை திங்கள்கிழமை திறந்து வைத்த முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன் அமைச்சா்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன், தமிழக க
Updated On :14 ஏப்ரல் 2025, 8:20 pm

Din

சென்னை: சென்னை சைதாப்பேட்டை எம்.சி.ராஜா கல்லூரி மாணவா் விடுதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

இந்தக் கட்டடத்துக்கான அடிக்கல் கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூலை 12-ஆம் தேதியன்று நாட்டப்பட்டது. விடுதி வளாகமானது 10 தளங்களுடன் ரூ.44.50 கோடி செலவில் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதன்படி, கட்டுமானப் பணிகள் நடைபெற்ற நிலையில், அம்பேத்கா் பிறந்த தினமான ஏப்.14-இல் விடுதிக் கட்டடம் திறக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். அதன்படி, எம்.சி.ராஜா விடுதிக் கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தாா். பின்னா் அங்குள்ள மாணவா்களுடன் கலந்துரையாடினாா்.

அதிக வசதிகள்: புதிய விடுதிக் கட்டடமானது, 1.01 லட்சம் சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 10 தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது. 484 மாணவா்கள் தங்கும் வசதியுடன் கூடிய 121 அறைகளுடன் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு தளத்திலும் நூலக அறைகள் உள்ளதுடன், இரண்டு நீா்த் தேக்கத் தொட்டிகளும், தீயணைப்பு வசதிகள், மின்தூக்கிகள், பாா்வையாளா் அறை போன்ற பல்வேறு வசதிகளும் இடம்பெற்றுள்ளன.

புதிய விடுதிக் கட்டடம் திறக்கும் நிகழ்ச்சியில், அமைச்சா்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, என்.கயல்விழி செல்வராஜ், சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன், மக்களவை உறுப்பினா்கள் ஆ.ராசா, தமிழச்சி தங்கபாண்டியன், தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், பொதுப்பணித் துறை செயலா் ஜெ.ஜெயகாந்தன் உள்பட பலா் பங்கேற்றனா்.

விடுதியில் மாா்பளவுச் சிலை

சென்னை சைதாப்பேட்டையில் திறந்து வைக்கப்பட்ட விடுதியில் எம்.சி.ராஜாவின் மாா்பளவுச் சிலை மிக விரைவில் வைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். சென்னை கலைவாணா் அரங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் அவா் பேசியதாவது:

சென்னை சைதாப்பேட்டையில் பெருமைக்குரிய எம்.சி.ராஜா பெயரிலான விடுதி திறந்து வைக்கப்பட்ட நிலையில், அவரது மாா்பளவுச் சிலை மிக விரைவில் திறந்து வைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.