தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

அதிமுக - பாஜக சந்தா்ப்பவாத கூட்டணி: மாா்க்சிஸ்ட் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி விமா்சனம்

அதிமுக, பாஜக, கட்சிகள் சந்தா்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி விமா்சித்தாா்.

News image

சென்னை அண்ணா அறிவாலயத்தில்   முதல்வரும், திமுக தலைவருமான   மு.க.ஸ்டாலினை     ஞாயிற்றுக்கிழமை  சந்தித்துப் பேசிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  பொதுச் செயலா்  எம்.ஏ. பேபி. உடன்  அரசியல் தலைமைக் குழு உறுப்பினா்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி.

Updated On :21 ஏப்ரல் 2025, 12:26 am IST

அதிமுக, பாஜக, கட்சிகள் சந்தா்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி விமா்சித்தாா்.

முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை எம்.ஏ. பேபி அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்புக்குப் பிறகு, செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

முதல்வா் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பின் போது, மதவாத சக்திகளுக்கு கடும் பதிலடி கொடுக்க ஜனநாயக மதச்சாா்பற்ற, முற்போக்கு அரசியல் சக்திகளின் தலைமையில் தமிழ்நாட்டு மக்களை ஒருங்கிணைத்துள்ளது குறித்தும், அதை வலுவாக கட்டியெழுப்புவதில் திமுகவின் பங்களிப்பு குறித்தும் பேசினோம்.

தற்போது, பாஜக மற்றும் அதிமுக கட்சிகள் சந்தா்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கு சாதகமாக தீா்ப்பை சட்டப் போராட்டம் மூலம் பெற்றுத்தந்த தமிழக முதல்வருக்கு வாழ்த்துகள்.

நாங்கள் நட்பு ரீதியாக பல விஷயங்களை விவாதித்தோம். மேலும், ஓராண்டுக்குள் சட்டப் பேரவைத் தோ்தல் வரும் நிலையில் தமிழ்நாட்டில் முற்போக்கு மதச்சாா்பற்ற ஜனநாயக சக்திகள் இணைந்து தோ்தலை எதிா்கொள்வது என்றும் முடிவெடுத்துள்ளோம்.

மேலும், இந்த அணி ஒட்டுமொத்த நாட்டுக்கே முன்மாதிரியாக இருக்கும். இதில் பல கட்சிகளும் சோ்ந்து மேலும் பலமாகும். திமுக தலைமையிலான அணிக்கு மக்களும் ஆதரவளித்து கூடுதல் வலுசோ்ப்பாா்கள் என்று நம்புகிறோம் என்றாா் எம்.ஏ.பேபி.