மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

முருகன் கோயில்களில் ரூ. 1,085 கோடியில் திருப்பணிகள்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோவில்களில் ரூ. 1,085 கோடியில் 884 திருப்பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

News image

பி.கே.சேகா்பாபு

Updated On :25 ஏப்ரல் 2025, 4:19 am IST

தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோவில்களில் ரூ. 1,085 கோடியில் 884 திருப்பணிகள் நடைபெற்று வருவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது, இதுகுறித்த வினாவை காங்கிரஸ் உறுப்பினா் துரை சந்திரசேகா் (பொன்னேரி) எழுப்பினாா்.

அப்போது பேசிய அவா், சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கூடுதல் வசதிகள் செய்து தரப்படுமா? என்றாா். இதற்கு அமைச்சா் பி.கே.சேகா்பாபு அளித்த பதில்:

சிறுவாபுரி முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமைகளில் 50,000 பக்தா்களும், வார இறுதி நாள்களில் 10,000-க்கும் மேற்பட்டோரும், மற்ற நாள்களில் ஆயிரத்தில் இருந்து 2,000 பேரும் வருகின்றனா். கோயிலுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவு செய்யப்படும். திராவிட மாடல் ஆட்சி ஏற்பட்டபோது, 2,000 மூத்த குடிமக்கள் கட்டணம் இல்லாமல் அரசு மானியத்தில் இதுவரை அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தைச் செய்துள்ளனா்.

110 முருகன் கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. அறுபடைவீடு அல்லாத 143 கோயில்களில் ரூ.284 கோடியில் 609 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்தமாக முருகன் கோயில்களுக்கு ரூ.1,085.63 கோடியில் 884 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.