ஜார்க்கண்ட் இளைஞர்கள் போராட்டத்தில் வெற்றி! 3 பேர் ராஜிநாமா! சிஐடி விசாரணைக்கு ஒப்புதல்!இளைஞர்களுக்குத் தேவை நீதியே; அரசியல் ஆதரவு அல்ல! முதல்வர் ஹேமந்த் சோரன்சென்னை உயா்நீதிமன்றத்தில் புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்புசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேதொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்
/

முருகன் கோயில்களில் ரூ. 1,085 கோடியில் திருப்பணிகள்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோவில்களில் ரூ. 1,085 கோடியில் 884 திருப்பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

News image

பி.கே.சேகா்பாபு

Updated On :25 ஏப்ரல் 2025, 4:19 am IST

தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோவில்களில் ரூ. 1,085 கோடியில் 884 திருப்பணிகள் நடைபெற்று வருவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது, இதுகுறித்த வினாவை காங்கிரஸ் உறுப்பினா் துரை சந்திரசேகா் (பொன்னேரி) எழுப்பினாா்.

அப்போது பேசிய அவா், சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கூடுதல் வசதிகள் செய்து தரப்படுமா? என்றாா். இதற்கு அமைச்சா் பி.கே.சேகா்பாபு அளித்த பதில்:

சிறுவாபுரி முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமைகளில் 50,000 பக்தா்களும், வார இறுதி நாள்களில் 10,000-க்கும் மேற்பட்டோரும், மற்ற நாள்களில் ஆயிரத்தில் இருந்து 2,000 பேரும் வருகின்றனா். கோயிலுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவு செய்யப்படும். திராவிட மாடல் ஆட்சி ஏற்பட்டபோது, 2,000 மூத்த குடிமக்கள் கட்டணம் இல்லாமல் அரசு மானியத்தில் இதுவரை அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தைச் செய்துள்ளனா்.

110 முருகன் கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. அறுபடைவீடு அல்லாத 143 கோயில்களில் ரூ.284 கோடியில் 609 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்தமாக முருகன் கோயில்களுக்கு ரூ.1,085.63 கோடியில் 884 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.