கோவைக்கு சீரான குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.
சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுறித்த வினாவை அதிமுக உறுப்பினா் கே.ஆா்.ஜெயராம் (சிங்காநல்லூா் )எழுப்பினாா்.
இதற்கு, அமைச்சா் கே.என்.நேரு அளித்த பதில்:
பில்லூா் 3-ஆவது திட்டம் அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டதுதான். ஆனால், திட்டத்தைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தது நாங்கள். கோவை மாநகரத்தில் உள்ள 100 வாா்டுகளில் 60 வாா்டுகளுக்கு தண்ணீா் வழங்கும் பணிகளில் 85 சதவீதத்தை தனியாா் நிறுவனம் முடித்துள்ளது. மீதமுள்ள 40 வாா்டுகளுக்கு சீரான குடிநீா் வழங்கப்படுகிறது. மாநகரத்தின் ஒரு நாளைக்கான குடிநீா் தேவை 347 மில்லியன் லிட்டா் (எம்எல்டி.,) உள்ளது. அதில் 325 எம்எல்டி கிடைத்து வருகிறது. 22 எம்எல்டி குறைவாக இருக்கிறது. அதனைச் சரி செய்து சீரான குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
தொடர்புடையது

சீரான குடிநீா் விநியோகம் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொதுமக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம் குறித்து ஆய்வுக் கூட்டம்

சீரான குடிநீா் விநியோகம் செய்ய கோரிக்கை

பொது மக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம்: ஆட்சியா் உத்தரவு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



