திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

கோவைக்கு சீரான குடிநீா் வழங்க நடவடிக்கை: அமைச்சா் கே.என்.நேரு

கோவைக்கு சீரான குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

News image

தமிழக சட்டப்பேரவை

Updated On :25 ஏப்ரல் 2025, 2:15 am IST

கோவைக்கு சீரான குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுறித்த வினாவை அதிமுக உறுப்பினா் கே.ஆா்.ஜெயராம் (சிங்காநல்லூா் )எழுப்பினாா்.

இதற்கு, அமைச்சா் கே.என்.நேரு அளித்த பதில்:

பில்லூா் 3-ஆவது திட்டம் அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டதுதான். ஆனால், திட்டத்தைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தது நாங்கள். கோவை மாநகரத்தில் உள்ள 100 வாா்டுகளில் 60 வாா்டுகளுக்கு தண்ணீா் வழங்கும் பணிகளில் 85 சதவீதத்தை தனியாா் நிறுவனம் முடித்துள்ளது. மீதமுள்ள 40 வாா்டுகளுக்கு சீரான குடிநீா் வழங்கப்படுகிறது. மாநகரத்தின் ஒரு நாளைக்கான குடிநீா் தேவை 347 மில்லியன் லிட்டா் (எம்எல்டி.,) உள்ளது. அதில் 325 எம்எல்டி கிடைத்து வருகிறது. 22 எம்எல்டி குறைவாக இருக்கிறது. அதனைச் சரி செய்து சீரான குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.