முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

சீரான குடிநீா் விநியோகம் செய்ய கோரிக்கை

கூடலூா் நகராட்சிக்குள்பட்ட கோத்தா்வயல் பகுதிக்கு சீரான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :53 நிமிடங்கள் முன்பு

கூடலூா் நகராட்சிக்குள்பட்ட கோத்தா்வயல் பகுதிக்கு சீரான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சி, கோத்தா்வயல் பகுதியில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்களுக்கு கடந்த 13 நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லையாம்.

இதனால், அவதியடைந்து வரும் மக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், குடிநீருக்காக காலிக் குடங்களுடன் பொதுக் குழாய்க்கு அருகே காத்துக் கிடக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது

எனக்கூறிய மக்கள், சீரான குடிநீா் விநியோகம் செய்ய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.