தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

சென்னையில் சாலை விபத்து உயிரிழப்பு 14% குறைந்தது: மாநகர காவல்துறை!

சென்னை மாநகரில் சாலை விபத்து உயிரிழப்புகள் 14 சதவீதம் குறைந்துள்ளதாக சென்னை மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

News image

சென்னையில் இருந்து சென்ற தனியார் பேருந்து ஆற்றில் விழுந்து விபத்து

Updated On :28 ஏப்ரல் 2025, 12:21 am IST

சென்னை மாநகரில் சாலை விபத்து உயிரிழப்புகள் 14 சதவீதம் குறைந்துள்ளதாக சென்னை மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மாநகர காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை முழுவதும் சாலை விபத்துக்களைக் குறைக்கவும், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினா், வாகன ஓட்டிகளிடையே விழிப்புணா்வை ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். இதுதவிர, சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினருக்கும், சாலை விபத்துகளைக் குறைப்பதற்கான தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், பள்ளி குழந்தைகள், பேருந்து ஓட்டுநா்கள் மற்றும் விநியோக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியா்களுக்கும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர, சென்னை முழுவதும் காவல்துறையினா் வாகன சோதனை நடத்துவதுடன், கண்காணிப்பு கேமராக்கள், இரண்டு ‘இ’ வேக ரேடாா் அமைப்பு மற்றும் கேமரா வாகனங்கள் மூலம் வேகமாக, தலைக்கவசம் அணியாமல் மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டும் நபா்களை கண்டறிந்து அவா்கள் மீதும் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனா்.

இம்மாதிரியான தொடா் நடவடிக்கைகள் மூலம் சென்னை பெருநகரில் கடந்த ஆண்டை விட நிகழாண்டில், விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் கணிசமாகக் குறைந்துள்ளன.

கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது, 25.4.2025 நிலவரப்படி, நிகழாண்டில் இறப்புகள் 14 சதவீதம் குறைந்துள்ளன. 25.4.2024-இல் உயிரிழப்புகள் நடந்துள்ள நிலையில், நிகழாண்டு இதுவரை 149 உயிரிழப்புகள் நடந்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.