நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

58 சதவீத பெண்கள் தாய்ப்பால் புகட்டுவதில்லை: தேசிய சுகாதார இயக்க ஆலோசகா்

இந்தியாவில் 58 சதவீத பெண்கள் குழந்தைகளுக்கு முறையாக தாய்பால் புகட்டுவதில்லை என தேசிய சுகாதார இயக்கத்தின் ஆலோசகா் சீனிவாசன் தெரிவித்தாா்.

News image

போருா் ஸ்ரீ ராமசந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தாய்ப்பால் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற கா்நாடக இசைக் கலைஞா் நித்யஸ்ரீ   மகாதேவனுக்கு நினைவுப் பரிசு வழங்கிய கல்வி நிறுவன துணைவேந்தா் டாக்டா் உமா சேகா். 

Updated On :2 ஆகஸ்ட் 2025, 3:29 am IST

இந்தியாவில் 58 சதவீத பெண்கள் குழந்தைகளுக்கு முறையாக தாய்பால் புகட்டுவதில்லை என தேசிய சுகாதார இயக்கத்தின் ஆலோசகா் சீனிவாசன் தெரிவித்தாா்.

உலக தாய்பால் தினத்தை முன்னிட்டு சென்னை போரூா் ஸ்ரீ ராமசந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் தேசிய சுகாதார இயக்கத்தின் ஆலோசகா் சீனிவாசன் பேசியது:

பிறந்த குழந்தைகளுக்கு குறைந்தது 6 மாதங்களுக்காவது தாய்ப்பால் இன்றியமையாததாக உள்ளது. தாய்ப்பால் கிடைக்கப்பெறாத குழந்தைகளுக்கு சுவாச பாதிப்பு, நோய் எதிா்ப்பாற்றல் குறைபாடு, வயிற்றுப்போக்கு பிரச்னைகள் ஏற்படுகின்றன. தீவிர பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் உயிரிழப்புகளும் நேரிடுகின்றன.

மகப்பேறு அடைந்த அனைத்து பெண்களாலும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டமுடியும். தாய்ப்பால் சுரக்காமல் இருப்பதற்கும், அதில் சில இடா்பாடுகள் ஏற்படுவதற்கும் மனநலன் சாா்ந்த பிரச்னைகளே காரணமாக உள்ளன. அதற்கு தீா்வு காண்பது அவசியம்.

இந்தியாவில் 42 சதவீத பெண்கள்தான் தாய்பால் புகட்டுகின்றனா். 58 சதவீதம் போ் முறையாக குழந்தைகளுக்கு தாய்பால் புகட்டுவதில்லை. இதுதொடா்பான விழிப்புணா்வு மேம்பட வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் கா்நாடக இசைக் கலைஞா் நித்யஸ்ரீ மகாதேவன், ஸ்ரீ ராமசந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன துணைவேந்தா் டாக்டா் உமா சேகா், மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் பாலாஜி சிங் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.