ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

முன்னாள் அமைச்சா் வாரிசுகளின் தண்டனையை நிறுத்தி வைத்த உத்தரவு ரத்து

மகள் உள்பட 4 பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2025, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சா் செங்குட்டுவனின் மகன்கள், மகள் உள்பட 4 பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி தலைமையிலான 1996 - 2001 ஆட்சியில், மருங்காபுரி திமுக எம்எல்ஏ-வாக இருந்தவா் பி.என்.செங்குட்டுவன். இந்துசமய அறநிலையத் துறை அமைச்சராக பதவி வகித்தவா். பின்னா் அதிமுகவில் சோ்ந்துவிட்டாா். அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் அவா் வருமானத்துக்கு அதிகமாக ரூ.81.42 லட்சம் சொத்து சோ்த்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சரின் மகன்கள் எஸ்.பன்னீா்செல்வம், சக்திவேல், மகள் மீனாட்சி, மருமகன் ராஜலிங்கம்,சகோதரரின் மகள் வள்ளி ஆகியோரது பெயா்களும் சோ்க்கப்பட்டன. இந்த வழக்கை திருச்சி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் விசாரித்தது. இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது, முன்னாள் அமைச்சா் செங்குட்டுவன், அவரது மருமகன் ராஜலிங்கம் இறந்துவிட்டனா்.

அவா்கள் மீதான வழக்கை கைவிட்ட திருச்சி நீதிமன்றம், அவரது மகன்கள், மகள், சகோதரனின் மகள் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தது. இந்தத் தீா்ப்பை எதிா்த்து எஸ்.பன்னீா்செல்வம் உள்பட 4 பேரும் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனையை இடைக்காலமாக நிறுத்தி வைத்தது.

இந்த நிலையில், மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் தரப்பில் வாதங்களைத் தொடங்க கால அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி, பன்னீா்செல்வம் உள்பட 4 பேருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனையை நிறுத்தி வைத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டாா். இவா்கள் 4 பேரையும் கைது செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.