இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

News image
பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.
Updated On :2 ஆகஸ்ட் 2025, 10:54 am

இணையதளச் செய்திப் பிரிவு

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டியில் கூறியதாவது: கவின் ஆணவக்கொலை வழக்கை விசாரிக்கும் சிபிசிஐடி மீது நம்பிக்கை இல்லை. உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும் என விசிக தலைவர் தொல் திருமாவளவன் கூறுவது சிபிசிஐடியையும், காவல்துறையையும் கையில் வைத்திருக்கும் முதல்வர் மீது அவருக்கு நம்பிக்கை இல்லை என்றுதான் அர்த்தம்

மக்களுடைய வரிப் பணத்தை வீணாக திமுக கட்சியில் பயன்படுத்துவதை நீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகளை பயன்படுத்த எவ்வளவோ துறைகள் உள்ள நிலையில் திமுக கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர்களாக்கி இருப்பதை உயர் நீதிமன்றம் கண்டித்தது வரவேற்கத்தக்கது. வன்கொடுமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று முதலில் நான்தான் தெரிவித்தேன். யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பொழுதும் கூறுகிறேன்.

சாத்தான்குளம் லாக்அப் மரண வழக்கில் உரிய விசாரணை வேண்டும் என்று கூறிய திமுக சிவகங்கை லாக்அப் மரண வழக்கில் என்ன செய்கிறது. ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தூண்டுதலால் தான் அந்த மரணம் நிகழ்ந்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர்கள் போன்றவர்கள் காவல் துறையில் இருக்கும் வரை சட்டம் ஒழுங்கு சரியாக இருக்காது. திறனற்ற காவல் துறையாகத்தான் உள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

summary

BJP state president Nainar Nagendran has said that the Party of Viduthalai Chiruthaigal have no faith in the Chief Minister.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.