மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாக பாசன தேவை குறைந்தது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 14,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 10,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 9,200 கனஅடியிலிருந்து வினாடிக்கு 8776 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 118.54 அடியிலிருந்து 118.20 அடியாக குறைந்துள்ளது.
நீர் இருப்பு 96.62 டிஎம்சியாக உள்ளது.
Summary
The amount of water released from Mettur Dam for Cauvery Delta irrigation has been reduced.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










