27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

விமானங்கள் ரத்து: வெளி மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

விமானங்கள் ரத்தானதால் வெளி மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்...

News image

சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

Updated On :7 டிசம்பர் 2025, 12:54 am IST

சென்னையிலிருந்து செல்லும் இண்டிகோ விமானங்கள் ரத்தான நிலையில், பயணிகள் வசதிக்காக ஞாயிற்றுக்கிழமை (டிச. 7) வெளிமாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

கடந்த சில நாள்களாக இண்டிகோ விமான சேவை முற்றிலுமாக ரத்தாகியுள்ளது. ஆகவே, பயணிகள் வசதிக்காக தெற்கு ரயில்வே சாா்பில் சென்னையிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

தெலங்கானா, ஆந்திரம்: அதன்படி, தெலங்கானா மாநிலம் சாா்லபள்ளியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (டிச.7) மாலை 6 மணிக்கு புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண்: 06019) மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூா் வந்தடையும்.

அதேபோல், சென்னை எழும்பூரிலிருந்து டிச. 7-இல் பிற்பகல் 12.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 07147) மறுநாள் அதிகாலை 3 மணிக்கு ஆந்திர மாநிலம் செகந்திராபாத் சென்றடையும். அந்த ரயில் கூடூா், நெல்லூா், தெனாலி, விஜயவாடா வாரங்கல், காஜிபேட் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

பெங்களூருக்கு சிறப்பு ரயில்: பெங்களூருவிலிருந்து டிச. 7-ஆம் தேதி காலை 8.05 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06255) மறுநாள் இரவு 11.45 மணிக்கு எழும்பூா் வந்தடையும். இந்த ரயில், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பூா் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.