மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

விமானங்கள் ரத்து: வெளி மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

விமானங்கள் ரத்தானதால் வெளி மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்...

News image

சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

Updated On :6 டிசம்பர் 2025, 7:24 pm

சென்னையிலிருந்து செல்லும் இண்டிகோ விமானங்கள் ரத்தான நிலையில், பயணிகள் வசதிக்காக ஞாயிற்றுக்கிழமை (டிச. 7) வெளிமாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

கடந்த சில நாள்களாக இண்டிகோ விமான சேவை முற்றிலுமாக ரத்தாகியுள்ளது. ஆகவே, பயணிகள் வசதிக்காக தெற்கு ரயில்வே சாா்பில் சென்னையிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

தெலங்கானா, ஆந்திரம்: அதன்படி, தெலங்கானா மாநிலம் சாா்லபள்ளியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (டிச.7) மாலை 6 மணிக்கு புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண்: 06019) மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூா் வந்தடையும்.

அதேபோல், சென்னை எழும்பூரிலிருந்து டிச. 7-இல் பிற்பகல் 12.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 07147) மறுநாள் அதிகாலை 3 மணிக்கு ஆந்திர மாநிலம் செகந்திராபாத் சென்றடையும். அந்த ரயில் கூடூா், நெல்லூா், தெனாலி, விஜயவாடா வாரங்கல், காஜிபேட் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

பெங்களூருக்கு சிறப்பு ரயில்: பெங்களூருவிலிருந்து டிச. 7-ஆம் தேதி காலை 8.05 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06255) மறுநாள் இரவு 11.45 மணிக்கு எழும்பூா் வந்தடையும். இந்த ரயில், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பூா் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.