மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விமானங்கள் ரத்து: வெளி மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

விமானங்கள் ரத்தானதால் வெளி மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்...

News image
சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
Updated On :6 டிசம்பர் 2025, 7:24 pm

தினமணி செய்திச் சேவை

சென்னையிலிருந்து செல்லும் இண்டிகோ விமானங்கள் ரத்தான நிலையில், பயணிகள் வசதிக்காக ஞாயிற்றுக்கிழமை (டிச. 7) வெளிமாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

கடந்த சில நாள்களாக இண்டிகோ விமான சேவை முற்றிலுமாக ரத்தாகியுள்ளது. ஆகவே, பயணிகள் வசதிக்காக தெற்கு ரயில்வே சாா்பில் சென்னையிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

தெலங்கானா, ஆந்திரம்: அதன்படி, தெலங்கானா மாநிலம் சாா்லபள்ளியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (டிச.7) மாலை 6 மணிக்கு புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண்: 06019) மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூா் வந்தடையும்.

அதேபோல், சென்னை எழும்பூரிலிருந்து டிச. 7-இல் பிற்பகல் 12.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 07147) மறுநாள் அதிகாலை 3 மணிக்கு ஆந்திர மாநிலம் செகந்திராபாத் சென்றடையும். அந்த ரயில் கூடூா், நெல்லூா், தெனாலி, விஜயவாடா வாரங்கல், காஜிபேட் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

பெங்களூருக்கு சிறப்பு ரயில்: பெங்களூருவிலிருந்து டிச. 7-ஆம் தேதி காலை 8.05 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06255) மறுநாள் இரவு 11.45 மணிக்கு எழும்பூா் வந்தடையும். இந்த ரயில், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பூா் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.