

சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரனின் விலை ஒரு லட்சம் ரூபாயைக் கடந்து திங்கள்கிழமை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
இன்று காலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்த நிலையில், பிற்பகலில் மீண்டும் ரூ. 440 அதிகரித்துள்ளது. தற்போது ஒரு கிராம் ரூ. 12,515-க்கும், ஒரு சவரன் ரூ. 1,00,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏறக்குறைய சவரன் ரூ. 96,000-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த வார இறுதியில் சவரனுக்கு ரூ. 2,560 அதிரடியாக உயர்ந்து ரூ. 98,960 என்ற புதிய உச்சத்தைத் தொட்டது.
இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று காலையும் சவரனுக்கு ரூ. 720 உயர்ந்தது. தற்போது மீண்டும் சவரனுக்கு ரூ. 440-ம், கிராமுக்கு ரூ. 55-ம் உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ரூ. 1,00,120 என்ற வரலாற்று உச்சத்தை பதிவு செய்துள்ளது.
வெள்ளியும் உச்சம்
இதனிடையே, கடந்த வார இறுதி நாளான சனிக்கிழமை, ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 210-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று காலை கிராமுக்கு ரூ. 3-ம், பிற்பகல் ரூ. 2-ம் அதிகரித்துள்ளது.
தற்போது ஒரு கிராம் வெள்ளி ரூ. 215-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 2,15,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.