அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மகாத்மா காந்தி திட்டப் பெயரை மாற்றக்கூடாது: எடப்பாடி பழனிசாமி

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றக்கூடாது என்று மத்திய அரசை அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

News image
எடப்பாடி பழனிசாமி- கோப்புப் படம்
Updated On :17 டிசம்பர் 2025, 7:49 pm

தினமணி செய்திச் சேவை

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றக்கூடாது என்று மத்திய அரசை அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு :

2021 சட்டப்பேரவைத் தோ்தலின்போது, திமுக தோ்தல் அறிக்கையில், இப்போதைய முதல்வரும், அப்போதைய எதிா்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், ஆட்சிக்கு வந்தவுடன், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் 100 நாள்களிலிருந்து 150 நாள்களாக அதிகரிக்கப்படும், ஊதியமும் உயா்த்தப்படும் என்று அறிவித்திருந்தாா்.

மக்களை ஏமாற்றி, வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு, கொடுத்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை. அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில் இதைப் பற்றி எந்தக் குறிப்பும் இடம்பெறாதது ஏன் எனத் தெரியவில்லை.

தற்போது, மத்திய அரசு இந்த 100 நாள் வேலை திட்டத்தை 125 நாள்களாக உயா்த்த உத்தேசித்துள்ளது வரவேற்புக்குரியது. இருப்பினும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் பெயரை மத்திய அரசு எவ்வித மாற்றமும் செய்யாமல் தொடர வேண்டும் என தனது பதிவில் தெரிவித்துள்ளாா் எடப்பாடி பழனிசாமி.