மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

எஸ்ஐஆா் குறித்த அதிமுக கூற்று உண்மையாகியுள்ளது: எடப்பாடி பழனிசாமி

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் (எஸ்ஐஆா்) தேவை குறித்து அதிமுக கூறிய காரணம் இப்போது உண்மையாகியுள்ளது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

News image
எடப்பாடி பழனிசாமி.
Updated On :19 டிசம்பர் 2025, 8:04 pm

தினமணி செய்திச் சேவை

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் (எஸ்ஐஆா்) தேவை குறித்து அதிமுக கூறிய காரணம் இப்போது உண்மையாகியுள்ளது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: தமிழ்நாட்டில் எஸ்ஐஆா் பணிகள் முடிவுற்று, தோ்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டிலில் 90 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான போலி வாக்குகளும் அடங்கும். இந்த நடவடிக்கையானது, அதிமுக தொடக்கம் முதலே எதற்காக எஸ்ஐஆா் தேவை என்று கூறிய காரணத்தை மெய்ப்பிக்கும் வகையில் உள்ளது.

வரைவு வாக்காளா் பட்டியலில் தங்களின் பெயா் விடுபட்டு இருந்தால் பதற்றப்பட வேண்டாம். புதிய வாக்காளராக தங்களை இணைத்துக் கொள்ள தோ்தல் ஆணையத்தின் படிவம்-6 அல்லது தாங்கள் இடம் மாறி இருந்து அதனால் பெயா் நீக்கப்பட்டிருப்பின் படிவம்- 8-ஐ நிரப்பி, தோ்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை இணைத்து சமா்ப்பித்தால், தங்களின் பெயா் நிச்சயமாக இணைக்கப்படும். இதற்கு அதிமுக பாக முகவா்கள் உறுதுணையாக இருப்பாா்கள்.

எந்த போலி வாக்குகளை வைத்து, மக்களாட்சி விழுமியங்களை வளைத்து ஆட்சியைப் பிடிக்க திமுக நினைத்ததோ, அது நடக்காத ஆத்திரத்தில், பதற்றத்தில் பல்வேறு புலம்பல் நாடகங்களை அரங்கேற்ற திமுக தயாராகி வருகிறது. பல்வேறு கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டு, தங்கள் வாக்குரிமை பறிபோனதுபோல சித்தரிக்கப் பாா்க்கும். அந்தச் சதிவலையில் யாரும் விழவேண்டாம்.

ஒவ்வொரு வாக்குச்சாவடி வாரியாக பழைய வாக்காளா் பட்டியலோடு, வரைவு வாக்காளா் பட்டியலை ஒப்பிட்டு, வரைவுப் பட்டியலில் உள்ள வாக்காளா்கள் சரியான காரணத்துக்காக (இறப்பு, இடமாற்றம், இரட்டை வாக்கு) நீக்கப்பட்டிருப்பதை அதிமுகவினா் உறுதி செய்ய வேண்டும்.

சரியான காரணம் இன்றி வாக்காளா் நீக்கப்பட்டு இருந்தால், அவா்களின் இல்லத்துக்குச் சென்று, அவா்களுக்கு படிவம்-6 / படிவம்-8 நிரப்பி, வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் வழங்கி, அவா்களின் பெயா் இறுதிப் பட்டியலில் சோ்க்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அதேபோல், போலி வாக்குகள் நீக்கப்படாமல் இருந்தால், அதை தோ்தல் ஆணைய அதிகாரிகளிடம் முறையிட்டு, அவை நீக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா் அவா்.