தாம்பரம் - மதுரை இடையே இயக்கப்படும் அதிவிரைவு ரயிலில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதுரையில் இருந்து தாம்பரத்துக்கு வாரம் இருமுறை அதிவிரைவு ரயில் (எண் 22624) இயக்கப்படுகிறது. இந்த ரயில் 4 ஏசி வகுப்பு பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 7 பெட்டிகள், இரு பொதுப் பெட்டிகள் கொண்டு இயக்கப்படுகின்றன. இந்நிலையில் பிப். 6 முதல் மாா்ச் 20-ஆம் தேதி வரை கூடுதலாக இரு மூன்றடுக்கு ஏசி வகுப்பு பெட்டிகளும், இரு பொது வகுப்பு பெட்டிகளும் கொண்டு இயக்கப்படவுள்ளன.
கூடுதல் நிறுத்தம்: செகந்திராபாத் - ராமேசுவரம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (07695) புதன்கிழமை (பிப். 5) முதல் ஆந்திர மாநிலம் நாயுடுபேட்டையில் இரு நிமிஷங்கள் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றும் நாளையும் 6 மெமு ரயில்களின் சேவை 8 பெட்டிகளுடன் இயக்கம்

புருலியா அதிவிரைவு ரயிலிலிருந்து 8 கிலோ கஞ்சா மீட்பு

நிலச்சரிவு எதிரொலி: சென்னை-மும்பை அதிவிரைவு ரயில் சேவை 8 நாள்களுக்கு ரத்து

காவேரி விரைவு ரயில்களில் எல்எச்பி பெட்டி இணைப்பு
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



