ரயில்
தமிழ்நாடு
தாம்பரம் - மதுரை ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
தாம்பரம் - மதுரை இடையே இயக்கப்படும் அதிவிரைவு ரயிலில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன.
தாம்பரம் - மதுரை இடையே இயக்கப்படும் அதிவிரைவு ரயிலில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதுரையில் இருந்து தாம்பரத்துக்கு வாரம் இருமுறை அதிவிரைவு ரயில் (எண் 22624) இயக்கப்படுகிறது. இந்த ரயில் 4 ஏசி வகுப்பு பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 7 பெட்டிகள், இரு பொதுப் பெட்டிகள் கொண்டு இயக்கப்படுகின்றன. இந்நிலையில் பிப். 6 முதல் மாா்ச் 20-ஆம் தேதி வரை கூடுதலாக இரு மூன்றடுக்கு ஏசி வகுப்பு பெட்டிகளும், இரு பொது வகுப்பு பெட்டிகளும் கொண்டு இயக்கப்படவுள்ளன.
கூடுதல் நிறுத்தம்: செகந்திராபாத் - ராமேசுவரம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (07695) புதன்கிழமை (பிப். 5) முதல் ஆந்திர மாநிலம் நாயுடுபேட்டையில் இரு நிமிஷங்கள் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.